🔔 Stay Updated!

📣 தினசரி TNPSC வினாக்கள் உடனே தெரிந்துக்க! 🔔 Enable செய்யுங்கள்.

TNH பூலித்தேவர் – TNPSC PYQ முக்கிய குறிப்புகள்

2020–2025 வரை கேட்கப்பட்ட பூலித்தேவர் தொடர்பான முக்கிய புள்ளிகள்

🗓️ 2020–2025 TNPSC PYQ POINTS

Poolithevar TNPSC Important Points — பூலித்தேவர் பங்களிப்பு குறித்து தேர்வுகளில் அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. கீழே முக்கிய குறிப்புகள்:

  • தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர் புலித்தேவர் ஆவார்.
  • கோபால நாயக்கர் - திண்டுக்கல்
  • பாளையம் என்ற சொல் ஒரு பகுதியையோ ஒரு இராணுவ முகாமையோ அல்லது ஒரு சிற்றரசையோ குறிப்பதாகும். இவ்வமைப்பின் கீழ் தனிநபர் ஒருவர் ஆற்றிய சீரிய இராணுவ சேவைக்காக அவரின் கட்டுப்பாட்டின் கீழ் பாளையம் கொடுக்கப்பட்டது. வாரங்கல்லை சார்ந்த பிரதாபருத்ரனின் ஆட்சிக் காலத்தில் காகதீய அரசில் இப்பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மதுரை நாயக்கராக 1529 ல் பதவியேற்ற விஸ்வநாத நாயக்கர் அவர் தம் அமைச்சரான அரியநாதரின் உதவியோடு தமிழகத்தில் இம்முறையை அறிமுகப்படுத்தினார்.
  • தலைமைத் தளபதி சர்ஜான் கிரடாக் - வேலூர் கலகம் 1806
  • யாதுல் நாயக்கர் – ஆனைமலை
  • பூலித்தேவனால் தோற்கப்பட்ட ஆங்கில தளபதி ஜெனரல் அலெக்சாண்டர் ஹெரான்.
  • கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
  • புலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் புலித்தேவருக்கு உதவமுடியாமல் போனது.
  • கர்னல் ஹெரான் - புலித்தேவர்
  • மருது சகோதரர்கள் – சிறுவயல்
  • பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
  • புலித் தேவர் - நெற்கட்டும்செவல்
  • மேஜர் பானெர்மென் - பாஞ்சாலங்குறிச்சி முற்றுகை
  • கர்னல் அக்னியூ மற்றும் இன்னஸம் - மருது சகோதரர்கள்
  • பூலித்தேவரின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத கோட்டை சிவகிரி ஆகும் .
  • கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.